உன் மாமனார் பணத்தில் ஒன்னும் கட்டல என ஜோதிகாவை விளாசி உள்ளனர் ரசிகர்கள்.
Fans Blast Jyothika : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பின்னர் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா தற்போது தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் எல்லாம் எதற்கு?
நிறைய பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை கட்டுங்கள் என பேசினார். ஜோதிகாவின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜராஜசோழன் அவர் பக்தியால் கட்டிய கோவில் இது.. உன் மாமனார் காசுல ஒன்னும் கட்டல, மேக்கப் போட, சொகுசான வாழ்க்கைக்கு, காரில் ஊரைச் சுற்ற எதற்கு இவ்வளவு பணம் செலவு செய்கிறீர்கள்?
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பள்ளிக்கூடம், மருத்துவமனைகளை கட்டி விட்டு சிம்பிளாக வாழலாமே எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.