தனுஷை மறந்துவிட்டு சிம்புவின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயனை ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்து இருந்த காடு திரைப்படம் இன்று காலை அனைத்து திரையரங்குகளிலும் கோலாகலமாக வெளியிடப்பட்டது. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்திற்கு திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெந்து தணிந்தது காடு’ படத்தின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைப் பார்த்து கடுப்பான தனுஷ் ரசிகர்கள் சிம்புவுக்கு வாழ்த்து சொல்லனும்னு தோணுது. ஆனா தனுஷுக்கு தோணல, திருச்சிற்றம்பலம் ஃபிளாப் ஆகும்னு நினச்ச..ஆனா ஓடிடுச்சி..அதுக்குதான் ஆடக்கூடாது…நன்றியோட இருக்கணும்…கடவுள் பாத்திக்கிட்டு இருக்கான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் மெரினா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை தூக்கிவிட்டது தனுஷ்தான். ஆனால் அதனை மறந்து இருக்கும் சிவகார்த்திகேயனை தற்போது ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்த வைரலான பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.