Fans About Chithra Suicide

பாண்டியன் ஸ்டோர் சித்ராவின் தற்கொலை குறித்து ரசிகர்கள் சமுக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Fans About Chithra Suicide : தமிழ் சின்னத்திரையில் மக்கள் தொலைக்காட்சி முதல் பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் வரை தொகுப்பாளினியாக பணியாற்றியவர் சித்ரா.

படிப்படியாக வளர்ச்சி கண்ட இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்கூட தொழிலதிபர் ஹேம்நாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து இருந்த நிலையில் ஜனவரியில் திருமணம் நடைபெற இருந்தது.

இப்படியான நிலையில் சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்றிரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட சித்ரா அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால் நம்ப முடியவில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் அவருடன் அவருடைய வருங்கால கணவர் ஹேம்நாத் அவர்களும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் சித்ரா மரணமடைந்ததாக வெளியான தகவல் நிஜமாக இருக்கக் கூடாது எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சித்ராவின் தற்கொலை சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்ராவின் மறைவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/g48660305/status/1336516765501648910?s=19
https://twitter.com/12SantaOfficial/status/1336525207041843201?s=19
https://twitter.com/Abubuck23746547/status/1336524485105573888?s=19