பொன்னியன் செல்வன் திரைப்படத்தை அதிகப்படியான தொகையை கொடுத்து கைப்பற்றிய நிறுவனம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மாபெரும் பொருட்ச அளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் ரூ. 125 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை இந்நிறுவனம் வாங்கியுள்ள படங்களிலே அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டிருக்கும் படம் இப்படம் தான் என்றும் கூறப்படுகிறது.