நயன்தாராவின் குழந்தைகளை பார்க்க சென்ற நடிகை ராதிகா சரத்குமாரின் புகைப்படங்கள் வைரல்.

தென்னிந்திய திரை உலகில் லேடிஸ் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்று பெரும் சர்ச்சையில் சிக்கி இருந்த இவர்கள் தற்போது அதுதொடர்பான விசாரணையில் அவர்கள் விதிகளை மீறவில்லை என்பது தெரிந்த பின்னர் அந்த சர்ச்சைகள் ஓய்ந்தது.

தற்போது படப்பிடிப்புகள் எதிலும் கலந்து கொள்ளாமல் முழு நேரமும் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகை நயன்தாராவின் இல்லத்திற்கு பிரபல முன்னணி நடிகை ராதிகா சரத்குமார் குழந்தைகளை காண சர்ப்ரைஸ் ஆக சென்றிருக்கிறார். அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுடன் இணைந்து வெளியிட்டு இருக்கிறார்.

அதில் அவர், அழகான குழந்தைகளையும், அன்பான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பார்த்ததில் மகிழ்ச்சி என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.