கௌதம் வாசுதேவன் இயக்கியுள்ள படத்தில் சிம்பு ரோலில் நடிக்க வேண்டியது நான்தான் என வருத்தத்துடன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக தற்போது வரை தனக்கென தனி ஸ்டைலில் நடித்துக் கொண்டிருக்கும்  நடிகர் தான் சிம்பு. தற்போது இவர் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெய். 

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கௌதம் வாசுதேவன் அவர்களின் இயக்கத்தில் வெளியான “விண்ணைத்தாண்டி” வருவாயா என்ற படத்தில் நடித்திருந்த சிம்புவின் கதாபாத்திரத்தை பற்றி பேட்டியில் பேசியுள்ளார். 

அது என்னவென்றால் தமிழ் சினிமாவில் வெளியான காதல் திரைப்படங்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த படம் என்றால் அது “விண்ணைத்தாண்டி” வருவாயா  படம் தான். இந்தப்படம் சிம்புவிற்கு நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்து இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கான வாய்ப்பு முதலில் என்னிடம் தான் வந்தது ஆனால் நான் அதை தவற விட்டு விட்டேன் என்று வருத்தத்துடன் பேட்டியில் பேசியிருக்கிறார் நடிகர் ஜெய்.