மீ டூ விவகாரத்தில் நடிகர் அர்ஜுன் மீது கன்னட நடிகையான ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் குற்றசாட்டை வைத்திருந்தார்.
அதாவது நிபுணன் படத்தில் அர்ஜூனுடன் இணைந்து நடித்த போது படப்பிடிப்பில் தன்னை இறுக்கி அணைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு நடிகர் அர்ஜுன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த புகார் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அர்ஜுனுக்கு எதிராக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில் ஸ்ருதிஹரன் இத்தனை நாட்களாக இந்த வேதனையை மனதில் போட்டு புதைத்து கொண்டுள்ளார்.
நடிகர் அர்ஜுன் இதனை மறுத்து இருந்தாலும் ஸ்ருதி ஹரிஹரனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அது தான் அர்ஜுனின் பெருந்தன்மையை காட்டும் என கூறியுள்ளார்.
மேலும் ஸ்ருதிஹரிஹரன் போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தான் எப்போதும் துணை நிற்பேன் எனவும் அந்த டிவீட்டில் கூறியுள்ளார்.
@sruthihariharan ಶ್ರುತಿಹರಿಹರನ್.. ಅರ್ಜುನ್ ಸರ್ಜ ರವರ ಪ್ರಕರಣವನ್ನು ….ನಾವು ಸೂಕ್ಷಮತೆಯಿಂದ …ಹೊಣೆಗಾರಿಕೆಯಿಂದ…ನೋಡಬೇಕಾಗಿದೆ….#justasking pic.twitter.com/15p5OxdLCw
— Prakash Raj (@prakashraaj) October 21, 2018