எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் வராதது ஏன் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்தை தான் பிடித்து வருகிறது.
இதற்கான காரணம் என்ன என்று இயக்குனர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதாவது இவர் அளித்த பேட்டி ஒன்று எங்களது சீரியல் 7:30 மணி அளவில் ஒளிபரப்பானால் இன்னும் நிறைய ரேட்டிங் பெறும். ஒன்பதரை மணிக்கு ஒளிபரப்பாவதால் ஊரில் உள்ள பெரும்பாலான மக்கள் தூங்கி விடுவார்கள். இருந்தாலும் முதல் இடத்திற்கு மூன்றாவது இடத்திற்கும் பெரிய அளவில் ரேட்டிங்கில் வித்தியாசம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அதோடு சன் நெக்ஸ்ட் ஆப்பில் எதிர்நீச்சல் சீரியல் தான் முதல் இடத்தில் உள்ளது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.