ஈஸ்வரி வசமாக சிக்க குணசேகரன் எடுத்த முடிவால் குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
இது குறித்த ப்ரோமோ வீடியோவில் ஈஸ்வரி தனக்கு கொடுத்த கிப்ட் மறந்து வைத்து விட்டு வந்ததாக கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் எடுத்து வந்து கொடுக்க என்ன மா அது? என்ன கிப்ட் என குணசேகரன் கேட்க ஈஸ்வரி சிக்கிக் கொள்கிறார்.
அதன் பிறகு வீட்டில் எல்லோரும் ஒன்று கூட குணசேகரன் நான் ஒரு முடிவை எடுத்திருப்பதாக சொல்கிறார். மேலும் அப்பத்தா எங்கே என கேட்க அப்பத்தா நான் இங்கதான் இருக்கேன் என சொல்ல கீழே இறங்கி வா அப்பத்தா என கூறுகிறார். நான் இங்க இருந்து கேட்கிறேன். விஷயத்தை சொல் என அப்பத்தா சொன்னதும் குணசேகரன் தன்னுடைய முடிவை சொல்ல அதைக் கேட்டு கதிர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனால் அப்படி குணசேகரன் எடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.