எதிர்நீச்சல் சக்தியின் நிஜ மனைவி யார் என்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். டிஆர்பி ரேட்டிங்கில் சக்க போடு போடும் இந்த சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் சீரியல் நாயகனாக நடித்து வருகிறார் சபரி பிரசாந்த்.
அண்ணன் குணசேகரனின் தூண்டுதலால் ஜனனியை வீட்டை விட்டு வெளியே அனுப்பிய நிலையில் தற்போது சீரியல் கதைக்களம் வேறு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சக்தியின் நிஜ மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவருக்கு கடந்த வருடம் கிருத்திகா பிரியா என்பவரிடம் திருமணம் நடந்துள்ளது. இந்த வருடம் இருவரும் தலை தீபாவளியை கொண்டாடியுள்ள நிலையில் சபரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவில் தனக்குத்தானே அவர் ஹாப்பி மேரேஜ் லைப் என கூறிக் கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக இவர்தான் சக்தியின் உண்மையான மனைவியாக என ரசிகர்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.