ஐந்து நாளில் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது எதற்கும் துணிந்தவன் திரைப்படம்.
ET Enters 100Cr Club : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்த படத்திற்கு இமான் இசையமைத்திருந்தார். பெண்களையும், பெண்கள் பாதுகாப்பையும் மையக் கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்கள் கொண்டாட வைத்து வருகிறது.
இதனால் பாக்ஸ் ஆபீஸ் இப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. படம் வெளியாகி ஐந்து நாளில் இந்தத் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல்? மொத்தமாக எவ்வளவு வசூல் என்பது குறித்த நாள் வாரியான ரிப்போர்ட் இதோ
Day 1 – ₹ 30.54 cr
Day 2 – ₹ 18.10 cr
Day 3 – ₹ 20.31 cr
Day 4 – ₹ 23.18 cr
Day 5 – ₹ 8.25 cr
Total – ₹ 100.38 cr
வெகு விரைவில் 100 கோடி கிளப்பில் இணைந்த சூர்யாவின் திரைப்படமாக எதற்கும் துணிந்தவன் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.