Equal Rights for Women‘s in Property : ஹிந்து கூட்டு குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை சொத்தில் மகன்களுக்கு நிகராக மக்களுக்கும் சம உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பரம்பரை சொத்துக்கு பிறப்புரிமையின் அடிப்படையில் மகன்கள் உரிமை கோருவதை போல மகளும் உரிமை காரணம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹிந்து சொத்து பகிர்வு சட்டம் 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதில் தந்தைக்கு சொந்தமான பரம்பரை சொத்துக்கு மகன்கள்மட்டுமே பிறப்பின் அடிப்படையில் உரிமை உடையவர்களாக கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்பின் 2015 ஆம் ஆண்டு சொத்து பகிர்வு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போது வாழ்ந்துவந்த தந்தையின் உயிர் வாழும் மகள்களுக்கு மட்டுமே பரம்பரை சொத்துகளைப் பெறும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
தற்போது அதிரடியாக 2020ஆம் ஆண்டில், தற்போது எந்தவித பாகுபாடுமின்றி மகன்களுக்கு நிகராக மகள்களும் சொத்தில் உரிமை கோரலாம் என்று தனது முந்தைய உத்தரவை உச்சநீதிமன்றம் திருப்தி உள்ளது. இந்த உத்தரவிற்கு பலர் தரப்பில் இருந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.