கன்னியாகுமரியில் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என திமுகவினர் பொய் பிரச்சாரத்திற்கு முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

EPS Speech in Kanyakumari : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதல்வர் பழனிசாமி அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டந்தோறும் ஓட்டு சேகரித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரியில் ஓட்டு சேகரித்த போது கன்னியாகுமரியில் கன்ட்டெய்னர் போர்ட் அமைக்கப்படும் என திமுகவினர் கூறி வருகின்றனர். ஆனால் அது முற்றிலும் பொய். ஒரே போதும் அதனை கன்னியாகுமரியில் அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

திமுகவினர் அதிமுக கன்னியாகுமரியில் ஒரு கொள்கலன் முனைய துறைமுகம் உருவாக்கப்படும் என கூறி வந்த நிலையில் முதல்வர் பழனிசாமி இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.