EPS Speech in Covai

எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை அ.தி.மு.க அரசு விட்டு கொடுக்காது என முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.

EPS Speech in Covai : தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று கோவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இஸ்லாமிய மக்களின் பாதுகாப்பு குறித்து பேசியுள்ளார்.

அதாவது மத்திய அரசு சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகளை அ.தி.மு.க அரசு விட்டு கொடுக்காது, அவர்களுக்கு துணை நிற்கும் என முதல்வர் பேசினார்.

யாரும் யாரையும் மிரட்ட முடியாது, இந்த மண்ணிலே பிறந்த ஒவ்வொருவருக்கும் இங்கே வாழ்வதற்கு உரிமை உண்டு என கோவை குறிச்சியில் இஸ்லாமிய மக்களிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார் .