EPS SPEECH in Chennai Kodambakkam

பெண்கள் பற்றி திண்டுக்கல் லியோனி இழிவாக பேசியதை ஸ்டாலின் தட்டிக் கேட்காதது குறித்து முதல்வர் பழனிசாமி அவர்கள் பேசியுள்ளார்.

EPS SPEECH in Chennai Kodambakkam : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக அரசு செய்த சாதனைகளை வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் மாவட்டம் மாவட்டமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆனால் எதிர் கட்சியான திமுகவினர் அதிமுக ஊழல் அரசு எனவும் கூறி ஒட்டு சேகரித்து வருகின்றனர். ஆ ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்தவர் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது ஒருபுறமிருக்க திமுகவின் நட்சத்திர பேச்சாளரான திண்டுக்கல் லியோனி கோயம்புத்தூரில் பெண்களை இழிவாக பேசியதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே உள்ளது. ஆனால் இதுவரை ஸ்டாலின் திண்டுக்கல் லியோனியை கண்டிக்கவில்லை.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் ஓட்டு சேகரித்த போது பெண்களை இழிவாக பேசிய திண்டுக்கல் லியோனியை கூட கண்டிக்க திராணி இல்லாதவர் ஸ்டாலின் என ஆவேசமாக பேசியுள்ளார்.