Edappad Palanisamy Speech in AIADMK Meeting

தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான் என பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

EPS Speech in AIADMK Meet : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது. உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதார சரிவை சந்தித்த போதிலும் தமிழகம் அன்னிய முதலீடுகளை ஈர்த்து இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இப்படி அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. வரும் 2021 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற வேண்டுமென முதலமைச்சர் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் தேர்தலை சந்திப்பது குறித்த அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசத் தொடங்குவதற்கு முன்னரே சில நிமிடங்களுக்கு ஓயாத கைதட்டல்களை கேட்க முடிந்தது. முதலமைச்சரின் செயல்பாடுகளுக்கு தொண்டர்கள் கைதட்டி பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

அதன் பின்னர் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவிலேயே தொண்டன் முதலமைச்சராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என பேசினார். அதிமுகவில் மட்டும் தான் தொண்டன் முதல்வராக முடியும்.

ஏன் இங்கு அமர்ந்து இருப்பவர்களில் ஒருவர்கூட வருங்காலத்தில் அதிமுகவின் எம்எல்ஏ, எம்பி ஆகலாம். அவ்வளவு ஏன் வரும் காலத்தில் முதலமைச்சராக கூட ஆகலாம்.

தொண்டர்களை முதலமைச்சராக்கும் ஒரே கழகம் அதிமுக தான் என பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.