முக அழகிரி கட்சி ஆரம்பித்தால் திமுக இரண்டாக பிரியும் என ஈரோட்டில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
EPS Speech About DMK in Erode : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் பிரச்சரத்தின் போது பேசிய முதலமைச்சர், ஊழல் குற்றசாட்டுகள் குறித்து பேசி வரும் ஸ்டாலினிடம் நேரில் விவாதிக்க அழைத்தால், நீதிமன்றத்தை காரணம் கூறி ஸ்டாலின் பின் வாங்குவதாக விமர்சனம் செய்தார். ஊழல் குறித்து ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கருணாநிதி சென்னைக்கு வந்த போது ரயிலில் வந்தாதாக குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் தெரிவித்தார்.
அ.தி.மு.கவை எந்நாளும் உடைக்க முடியாது என்றும், ஸ்டாலின் தி.மு.கவை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மு.க அழகிரி கட்சி ஆரம்பித்தால் தி.மு.க இரண்டாக பிரிந்துவிடும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மேலும் ரயில் மூலம் சென்னை வந்த கருணாநிதியின் குடும்பத்தாருக்கு சொத்துகள் சேர்ந்தது எப்படி? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.