ஸ்டாலின் சொல்றத நான் செய்றேனா? ஆவடியில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

EPS Questions to Stalin : தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் இன்று ஆவடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார்.

அப்போது விவசாய கடனை ரத்து செய்வதற்காக திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

குறைகளை பெட்டியில் போடாதீர்கள்; அழையுங்கள் 1100 : முதல்வர் குறைகளை பெட்டியில் போடுவதெல்லாம் பழைய காலம், வீட்டிலிருந்தே அரசை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். செல் போன் மூலம் மக்கள் குறைத்தீர்க்கும் திட்டத்தை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் நாடகம் ஆடுவது திமுக தான் என கூறியுள்ளார்.

7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதற்கு ஒரே காரணம் திமுக தான் என்று பேசியுள்ளார்.

மேயராகவும், துணை முதல்வராகவும் இருந்தபோது ஸ்டாலின் ஏன் ஊர், ஊராக செல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.