மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

EPS Press Meet in Salem : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். நாம் தமிழகம், தேமுதிக கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து கேட்டதற்கு நாம் தமிழகம் எங்களது கூட்டணியில் இல்லை எப்போதோ கூட்டணியை முறித்துக் கொண்டு சென்று விட்டது என தெரிவித்தார். அவர்கள் பக்குவமில்லாதவர்கள் என்று தான் சொல்லுவேன் என பேசியுள்ளார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கேட்டதற்கு இப்போது தானே வெளியிட்டுள்ளார்கள். அதிமுக அரசு மக்களின் தேவையறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கூறினார். திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என ஸ்டாலின் கூறி வருவதை பற்றி கேட்க அவர் என்ன ஜோசியமா பார்க்குறார். மக்கள் தானே ஒட்டு போடுறாங்க என தெரிவித்துள்ளார்.

கடந்த முறை திமுக தான் ஜெயிக்கும் என பத்திரிகைகள் கூறின. ஆனால் அதனை அதிமுக முறியடித்தது. இந்த தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்தார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.