நாங்களா ஊழல் பண்ணி விட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
EPS Latest Speech in Thiruchy : தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் எதிர்க்கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வகையில் திருச்சியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அதிமுக பொய் சொல்லி விட்டதாக திமுக தொடர்ந்து தேங்கி போன ரெக்கார்டு மாதிரி பேசி வருகிறது. மங்கள ஊழல் செய்தோம், அப்படி என்ன பண்ணிட்டோம் சொல்லுங்க என விமர்சனம் செய்துள்ளார்.
பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை அப்படியே மறந்துவடுகின்றனர் திமுகவினர். நாடாளுமன்றத் தேர்தலுக்காக என்னென்னவோ வாக்குறுதிகளை கொடுத்தார்கள் ஆனால் என்ன செய்தார்கள்??
தமிழகத்திற்காக கூடுதல் நிதி வாங்கி கொடுத்தார்களா? அல்லது புதிதாக தொழிற்சாலையை கொண்டு வந்தார்களா??
நல்லதொரு மக்களாட்சி தொடர திமுகவை ஆதரியுங்கள் என் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்காக உதவி வருகிறது. நல்லாட்சி தொடர அதிமுகவுக்கு ஓட்டளியுங்கள். வாரிசு அரசியல் செய்யும் திமுகவை புறக்கணியுங்கள் என பேசினார்.