Edappadi K Palanisamy

பிரச்சாரக் கூட்டத்தில் குழந்தையை தூக்கி கொஞ்சி உள்ளார் தமிழக முதல்வர். அதுமட்டுமல்லாமல் முதல்வர் பழனிசாமிக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

EPS in Erode Political Meeting : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு சிறந்த நல திட்டங்களை செயல்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல நன்மதிப்பை பெற்று உள்ளது தமிழக அரசு.

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மாவட்டம் மாவட்டமாக ஊர் ஊராகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று இவர் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அந்த பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவரின் குழந்தையை தூக்கி கொஞ்சி உள்ளார்.

முதல்வருக்கு வழி எங்கும் மலர்தூவி அவருக்கு அமோக வரவேற்பு அளித்துள்ளனர் ஈரோடு மாவட்ட மக்கள்.

கூட்டத்திலிருந்த மக்கள் எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்கு என தங்களது விரல்களை உயர்த்தி தமிழக முதல்வருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வரின் வேனை சுற்றி திருவிழா போல மக்கள் அலைகடலென திரண்டு உள்ளனர்.

மக்களை கூட்டங்களுக்கு இடையே அம்மா இரட்டை இலை உள்ளிட்ட புகைப்படங்கள் இடம் பெற்றிருந்த அட்டைகளை தொண்டர்கள் உற்சாகத்துடன் காட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

உங்கள் மகத்தான ஓட்டுக்களை இரட்டை இலைக்கு அளியுங்கள் என தமிழக முதல்வர் இரட்டை இலை சின்னத்தை காட்டி வாக்கு சேகரித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.