EPS flight repaired
EPS flight repaired

EPS flight repaired – சென்னை: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில், இயந்திர கோளாறு ஏற்பட்டதை அடுத்து மீண்டும் சென்னைக்கே திரும்பினார்.

மத்திய அரசின் சார்பில் முடிக்கப்பட்ட சுமார் 40 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா, கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் இன்று மதியம் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். மேலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் இன்று காலை புறப்பட்டார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற விமானத்தில் எதிர்பாராவிதமாக இயந்திர கோளாறு ஏற்பட்டது. எனவே விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.

இதை அடுத்து, தற்போது வேறொரு விமானம் மூலம் மதுரைக்கு முதலமைச்சர் எடப்பாடி செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்வார் என்று கூறப்படுகிறது.

இவ்விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.