நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
EPS Explain on 7 Members Release : தமிழக அரசியலில் 7 பேர் விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேச தொடங்கியுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக தவறான தகவல்களை பரப்பி வருகிறது. பேரறிவாளன் உட்பட 3 பேர் பேர் விடுதலை குறித்த கருணை மனுவை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை சென்று நிராகரித்தது.
இவர்களில் தண்டனை காலத்தை குறைக்கும் வகையில் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து மத்தியில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தற்போது நானும் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம் 7 பேர் விடுதலை குறித்து பேசிக் கொண்டுதான் வருகிறேன் என சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பேச தொடங்கியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அளித்த விளக்கம் முக்கியத்துவம் உடையதாக பார்க்கப்படுகிறது.