EPS Challenge to Stalin

துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு நான் ரெடி என முதல்வர் பழனிசாமி அவர்கள் எதிர் கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு சவால் விட்டுள்ளார்.

EPS Challenge to Stalin : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 234 தொகுதிகளிலும் தொடங்கியது.

இறுதியாக நடந்த 2 தேர்தல்களிலும் ஆட்சியை கைப்பற்ற முடியாத திமுக இம்முறையாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாகி செயல்பட்டு வருகிறது. இருப்பினும் ஸ்டாலின் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்து வருகிறது. மேலும் அனைத்து மேடைகளிலும் துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியவில்லை எனவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு நான் ரெடி என்று ஸ்டாலினுக்கு சவால் விட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சவாலை ஏற்று விவாதத்துக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.