அம்மாவின் பிறந்த நாளில் விளக்கேற்றி வழிபடுமாறு EPS, OPS ஆகியோர் கேட்டு கொண்டுள்ளனர்.
EPS and OPS Request : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது அதிமுக.
விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் வரும் பிப்ரவரி 24-ம் தேதி புரட்சி தலைவி அம்மாவின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் அதிமுகவை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் மக்களுக்கு தான் இயக்கம் சொந்தம்.அதிமுகவை விலை கொடுத்து ,வசைபாடி, வசிபடுத்தியோ வாங்க முடியாது. நல்லாட்சி பெற்ற மக்களுக்கும், நண்பர்கள் பலரும் நம் பக்கம் இருக்கிறார்கள்.
எதிரிகளும் துரோகிகளும் கைகோர்த்துக் கொண்டு நம் படையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். உழைப்பு ,உத்வேகம் ,ஒற்றுமை உணர்வால் அவர்களை தோற்கடித்து விரோதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிப்ரவரி24 மக்களை கண் இமைபோல் காத்த கடவுள் அம்மாவின் பிறந்த நாள். இந்த பொன்னாளன்று நீங்கள் ஒவ்வொருவரும் “என் இல்லம் அம்மாவின் இல்லம்” என்று உளமார நினைத்துக் கொண்டு ,உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.
கண்களை மூடியவாறு உள்நோக்கி பார்த்து நம் ஒப்பற்ற தலைவியின் புனித ஆத்மாவிடம் பிரார்த்தனை செய்து, “உயிர் மூச்சு உள்ளவரை அம்மாவின் வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தையும் காப்பேன் . இது அம்மா மீது ஆணை என்று கூறுங்கள்”. இந்த உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.