banner
பொதுமக்களுக்கு இடையேறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் பேனர்களை வைக்கக் கூடாது என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Eps and ops asking not to keep admk banner on roads – சமீபத்தில் சென்னை பள்ளிக்கரணை சாலையில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று கீழே விழுந்து சுபஸ்ரீ என்கிற இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதற்கு நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரம் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

அஜித் நேர்மை உங்க கிட்ட இல்ல, வச்சு விளாசிய துணை இயக்குனர்.!

இந்நிலையில், இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் ‘மக்களின் நலனுக்காக தொண்டாற்றுவதற்காகவே தோன்றிய மாபெரும் மக்கள் இயக்கமாகும்.

எனவே எச்சூழ்நிலையிலும் எக்காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கழக உடன்பிறப்புகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளனர்.