உங்கள வச்சு பட்டது போதும் என பிரபல சீரியலுக்கு இந்த வாரத்தோடு எண்டு கார்டு போட உள்ளது விஜய் டிவி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவிக்கு அடுத்தபடியாக சீரியல்களுக்கு பெயர்ப்பான தொலைக்காட்சி சேனல் விஜய் டிவி. ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்ந்து மக்கள் மத்தியில் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன.
கதையே இல்லாமல் கண்டமேனிக்கு சீரியலை கொண்டு செல்வதால் பலரும் விஜய் டிவி சீரியலை வெறுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப்படியான சீரியல்களில் ஒன்றுதான் சிப்பிக்குள் முத்து.
தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி யில் தொடர்ந்து பின்னாடியே சந்தித்து வந்த நிலையில் அதற்கு விஜய் டிவி எண்டு கார்டு போட உள்ளது. பிக் பாஸ் தொடங்க உள்ள காரணத்தினால் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்து மற்ற சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றத்தை செய்ய உள்ளது.
வரும் ஏழாம் தேதியோடு சிப்பிக்குள் முத்து சீரியல் முடிவுக்கு வரும் என தகவல்கள் வெளியாக இதனால் அந்த சீரியல் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். அதே சமயம் அப்படியே அந்த பாரதி கண்ணம்மாவை முடித்து வச்சா ரொம்ப நல்லா இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.