இது என்ன ராஜீவுக்கு வந்த சோதனை என ரசிகர்கள் வருத்தமடைய செய்துள்ளது வெளியாகி உள்ள தகவல்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் நடித்து பிரபலமானவர் ராஜு ஜெயமோகன். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கத்தி என்ற வேதத்தில் நடித்து வந்த இவர் விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்று டைட்டிலை வென்றார்.
ஆனாலும் டைட்டிலை வென்ற இவருக்கு பெரியதாக வாய்ப்புகள் அமைந்ததாக தெரியவில்லை. விஜய் டிவியில் புதிதாக தொடங்கிய ராஜா வீட்டுல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் சீரியல் பிரபலங்கள், வெள்ளித்திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டதால் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறியது.
இப்படியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி முற்றிலுமாக நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தகவலை ராஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருப்பதால் இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ராஜூ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.