வெறும் 62 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பான மீரா சீரியல் தற்போது ஒரேடியாக முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை குஷ்பு. மேலும் இவர் சின்னத்திரையிலும் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீரா என்ற சீரியலை குஷ்பு அவர்களே எழுதிய இயக்கி நடத்தி வருகிறார். ஆனால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத இந்த சீரியல் முடிவுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகின.
அதற்கேற்றார் பல தற்பொழுது நடிகை குஷ்பூ சீரியல் குழுவினருடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை பதிவிட்டு எந்த ஊரில் நல்ல விஷயம் ஆக இருந்தாலும் ஒரு நாள் முடிவுக்கு வந்தாக வேண்டும். தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர வேண்டும் என நினைத்தாலும் அதில் அர்த்தமில்லை என புரிகிறது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனல் மற்றும் தன்னுடைய குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் என்னுடைய குழுவுடன் உங்களை வேறு ஒரு ப்ராஜெக்ட்டில் சந்திக்கிறேன் என தெரிவிக்கின்றார்.