Election Update : தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
MLA தகுதி நீக்கம் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 18 எம்.எல்.ஏ க்களும் மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் செல்ல கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்தால் அந்த 20 தொகுதிகளிலும், ஓராண்டுக்கு மேலாக எந்தஒரு மக்கள் நல பணிகளும் நடைபெறவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே, உடனடியாக அந்த 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், உள்ளாட்சி தேர்தல் கூட நடக்காத நிலையில், காலியாக உள்ள தொகுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என அத்தொகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர் .
எனவே தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் மீண்டும், மக்கள் நல திட்டங்கள் தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்படும் எனவே உடனடியாக இடைத்தேர்தல் நடத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.