Election commission of india :
சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்களின் தலைமையிலான குழுவினர் இன்று சென்னை வரவுள்ளனர்.
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி மே 19- ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18- ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
மேலும் ஏப்ரல் 18- ஆம் தேதி அன்றே, காலியாக உள்ள 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலையொட்டி, தற்போது வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று சென்னை வரவுள்ளனர்.
மேலும் இக்குழுவினர், நாளைமுதல் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையர்கள், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மேலும் தனியார் ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன்,
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.