Edappadi Palaniswami : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முன்னதாக, நெடுஞ்சாலை துறையின் டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அந்நேரம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நெடுஞ்சாலை துறையின் டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து தேதி குறிப்பிடாமல் இவ்வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமில்லாமல் அதிமுக நிர்வாகிகள் இடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக முதலமைச்சர் மீதான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு இருந்ததற்கு அதிகமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருந்தது குறிப்பிடதக்கது.