பெண்களின் பாதுகாப்பிற்கு நான் உறுதி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மகளிர் தின விழாவான இன்று பதிவிட்டுள்ளார்.
Edappadi Palanisamy Wishes to Womens : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. அம்மாவின் வழியில் மக்களின் தேவையறிந்து சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.
மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்களின் துயரங்களை துடைத்து வருகிறார்.
இன்று உலக மகளிர் தினம் என்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகளிர் தின வாழ்த்து கூறி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில் தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.