வெளிநாட்டிலிருந்து திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Edappadi palanisamy intervew about tn business – தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், துபாய், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். தொழில் முதலீட்டாளர்களையு அவர் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார் 14 நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அவர் இன்று தாயகம் திரும்பினார்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக இருந்தது.
தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் முதலீடு செய்ய வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளது. தமிழகம் இனிமேல் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும்.
உலகமெங்கும் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். அரசு பயணம் வெற்றிகரமாக முடிந்தது” என்றெல்லாம் கூறினார்.
புஷ்பா புருஷன் காமெடி நடிகையா இது? – இணையத்தில் லீக்கான அந்தரங்க புகைப்படங்கள்.!
உண்மையில் இந்தியாவில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது, குறிப்பாக அசோக் லைலாண்ட் மற்றும் பார்லே-ஜி போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பொருளாதா நெருக்கடி காரணமாக மோட்டார் துறை நெருக்கடியை சந்தித்து வரும் இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்துள்ள பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.