Edappadi Palanisamy and o.Paneer Selvam : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Tamil nadu

Edappadi Palanisamy and o.Paneer Selvam :

திருச்சி: முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், தன்னையும் யாராலும் பிரிக்க முடியாது என திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “பத்திரிகையாளர்கள் தான் முதல்வரையும் தன்னையும் பிரிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது” எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல்வருடன் கருத்து வேறுபாடு என்பதெல்லாம் பொய்யான தகவல்கள் எனவும், சுமூகமான உறவே அவர்கள் இருவருக்குள்ளும் உள்ளதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை மட்டுமே உள்ளது, இந்தக் கொள்கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்காது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது குறித்து கேள்வி கேட்கும் போது, மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் தான் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடத்துவதாகவும், இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பலமுறை அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் போது முந்தைய திமுக ஆட்சியில் வெள்ளை அறிக்கை அளிக்கப்படவில்லை என்றும்,

அதை மறந்துவிட்டு இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்கிறார் என்றும் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்தை தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அரசு முறை பயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதை ஏற்க முடியாது.

மேலும் என்னையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களையும் பத்திரிகையாளர்கள் தான் பிரிக்க முயற்சி செய்கிறார்கள்,. ஆனால் அந்த முயற்சி ஒரு போதும் பலிக்காது.! என தெரிவித்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.