Edappadi Palanisamy :
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றையக் கூட்டம் கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை மானிய கோரிக்கைகள் மீது, விவாதன விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்ட பேரவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு துறைசார்ந்த அதிகாரிகள் பதில் அளித்தனர்.
அதனை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேரவை விதி 110வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய திட்டங்களில் சில பின்வருமாறு காணலாம்..
* 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2 புதிய மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.
* தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதிதாக உதயமாகின்றன.
* தமிழகத்தில் காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு மாவட்டம், நெல்லையை பிரித்து தென்காசி மாவட்டம் புதிதாக உதயமாகின்றது
* தென்காசி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விரைவில் தனி அதிகாரி நியமிக்கப்படுவார். இவ்வாறு திட்டங்களை அறிவித்தார். மேலும்,
* விழுப்புரம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ 50 கோடி ஒதுக்கீடு
* ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும்
* தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து பிரித்து கும்பகோணத்தை விரைவில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட வாய்ப்பு
* முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்த உள்ளது.
* நகரங்களின் வார்டுகளிலும், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று தீர்வு காணப்படும்.
* மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்மந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். மேலும் ஒரு வார காலத்திக்கிற்குள் தீர்வு எடுக்கப்படும்.
* 29 நகரங்களில் மறு நில அளவை பணிகள் ரூ.30.29 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
பொள்ளாச்சி விவகாரம்..உடனடியாக குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்: தமிழிசை ஆவேசம்!
* பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக ரூ.50 கோடியில் ஏற்படுத்தப்பட்டும்.
* ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
* மீனவ இளைஞர்களுக்கு நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ரூ.31.15 கோடியில் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களை அறிவித்துள்ளார்.