Edappadi Palanisamy
Edappadi Palanisamy

Edappadi Palanisamy

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாற்றியமைக்கப்பட்ட தேர்தல் பிரசார பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் பிரசார பட்டியலில் கூறியிருப்பதாவது, நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் நாளை தமிழிசையை ஆதரித்து காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார்.

தொடர்ந்து நயினார் நாகேந்திரனை ஆதரித்து மாலை 6.10 மணிக்கு சாயல்குடி, முதுகுளத்தூர், ஏர்வாடி, ராமநாதபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதனை தொடர்ந்து, ஏப்ரல் 3- ஆம் தேதி ராஜாவை ஆதரித்து சிவகங்கை, மானாமதுரை, திருபுவனத்திலும் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, கோவில்பட்டியில் மாலை ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளத்தில் பிரசாரம் செய்கிறார்.

பின்னர் மனோஜ்பாண்டியனை ஆதரித்து மாலையில் திசையன்விளை, கூடங்குளத்திலும் இரவில் கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பின்னர் ஏப்ரல் 4- ம் தேதி மனோஜ்பாண்டியனை ஆதரித்து காலையில் வள்ளியூர், ராதாபுரம், நெல்லையிலும், மாலையில் அம்பை, ஆலங்குளத்திலும், டாக்டர்.கிருஷ்ணசாமியை ஆதரித்து கடையநல்லூர், வாசுதேவநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோயிலில் மறுநாள் ஸ்ரீவில்லிபுத்தூர் பிரசாரம் செய்கிறார்.

6 ஆம் தேதி அன்று தேனி ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து அலங்காநல்லூர் கேட், சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டியிலும், 7ம் தேதி அன்று தம்பிதுரையை ஆதரித்து வேடச்சந்தூரிலும், 11 ம் தேதி அன்று ஓமலூர், தீவட்டிப்பட்டியிலும் அன்புமணி ராமதாசை ஆதரித்து பொம்மிடி, மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டியில் பிரசாரம் செய்கிறார்.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட தேர்தல் பிரசார பட்டியலில் பிரச்சாரம் தொடர்பாக தகவல்கள் வெளியாகின.,

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.