Edappadi K.Palaniswami Speech About Lord Murugan

YouTube video

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திமுகவினர் தொடர்ந்து அதிமுகவையும் அவர்கள் திட்டங்களையும் விமர்சனம் செய்து வருகின்றனர். பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

அதிமுகவினர் திமுக முன் வைக்கும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை எடுத்தாலும் முருகன் வரம் தர மாட்டார். அதிமுகவிற்கு தான் முருகன் வரம் தருவார் என கோவை புலிக்குளத்தில் முதல்வர் பிரச்சாரத்தின் போது பேசியுள்ளார்.

EPS Speech in Covai Meeting

திமுக தலைவர் ஸ்டாலின் வேலை கையில் எடுத்து விட்டார், கடவுளை இழிவாக பேசியவர் கையில் கடவுள் வேலை கொடுத்திருக்கும் காட்சியை பார்க்கிறோம்.

முருக பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்துள்ளோம் எனவும், அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் வந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் பகல் வேஷம் போடுகிறார் எனவும், இப்போது தான் வேல் கண்ணுக்கு தெரிகிறது என முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.