Edappadi K. Palaniswami Kind Request To Tamilnadu People

YouTube video

Edappadi Palanisamy Speech in Viralimalai : தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல்வருக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதல்வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று மிகவும் எளிமையான முறையில் தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விராலிமலையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பேசிய போது அனைவரும் குடும்பத்துடன் அரசு மருத்துவமனைகளில் கொரானா தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சில தினங்களுக்கு முன்னர் தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓமந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.