Edappadi K Palaniswami சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த 16 கமாண்டோ படையினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சேலம் 8வழி சாலை தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து.!
இதுகுறித்து முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா மாநிலம்,
கட்சிரோலி மாவட்டத்தில் போலீஸ் வாகனத்தின் மீது நேற்று மாவோயிஸ்ட்கள் நிகழ்த்திய கொடூர தாக்குதலில்,
மகாராஷ்டிரா மாநில போலீசின் சி60 கமாண்டோ படையினர் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
மேலும் இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த 16 கமாண்டோ படை வீரர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது இரங்கலை தெரிவித்தார்.
மேலும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் எனவும் தெரிவித்தார்.இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.