தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு செல்லும் இடங்களில் எல்லாம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
Edappadi K Palanisamy Meeting Highlights : தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் வளர்ச்சியை பெருக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்பட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
மேலும் வரும் மே மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று ஓட்டு சேகரித்து அதிமுகவின் சாதனைகளையும் எடுத்துக் கூறி வருகிறார்.
ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸுக்கு வழி விடுமாறு கூறியது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.
கடந்த வாரம் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, நெல்லை, என பெரும்பாலான மாவட்டங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார். செல்லும் வழிகளில் எல்லாம் விவசாயிகள் மீனவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
மக்களுடன் மக்களாக சென்று தேநீர் கடையில் டீ அருந்தியதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் வீட்டிற்குச் சென்று காபி குடித்ததும் பெரும் பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்தது.
மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று நேரடியாக மக்களை சந்திக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிரச்சாரம் இருந்து வருகிறது.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஒரு இடத்தில் மக்களை கூட்டி அதுவும் குறிப்பாக பெண்களை அதிக அளவில் கூட்டி மக்களுக்கும் தனக்கும் 10 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து கொண்டு பேசுகிறார் எனவும் பலர் குற்றம் சாட்டி தொடங்கியுள்ளனர்.
கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி அவர்கள் ராணுவப் பணியில் இருந்தபோது உயிரிழந்தார். அவருடைய வீட்டிற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு அவருடைய உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முதல்வரின் இந்த செயல்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.