பிரபல நடிகையான ஸ்ரேயாவின் மகளுக்கு நடந்த காதணி விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளிவந்து வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால் போன்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்புக்கு மட்டுமல்லாமல் இவரின் நடனத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்றே சொல்லலாம்.

இதனைத் தொடர்ந்து இவர் Andrei koscheev என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பின்பு படம் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஸ்பெயின் நாட்டில் செட்டிலாகிவிட்டார். பின்னர் இவர்களுக்கு ராதா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்த பிறகு தான் ஸ்ரேயா அவர்கள் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோ மற்றும் போட்டோ போன்ற பதிவுகளை வெளியிடச் செய்தார்.

அந்த வகையில் தற்போது ஸ்ரேயாவின் மகளுக்கு நடந்த காதணி விழாவின் புகைப்படங்களை அவரின் கணவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அழகிய புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.