இனி எனது தோழியான சமந்தாவுடன் இணைந்து டப்பிங் பணி செய்ய முடியாது என வருத்தத்துடன் சின்மயி தெரிவித்துள்ள தகவல் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி பாடகியாக திகழ்பவர் தான் சின்மயி. தனது அழகான குரல் மூலம் பல ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் வெறும் பாடகியாக மட்டுமல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணி செய்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக பாடகி சின்மயி நடிகை சமந்தாவுக்குத் தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வந்திருக்கிறார்.

ஆனால் சமீபத்தில் பாடகி சின்மயி சமந்தாவுக்கு டப்பிங் பேசுவதை இனி என்னால் தொடர முடியாது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் கூறியது, “தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என் பயணம் முடிவடையும் என்று நினைக்கிறேன்.

என் சிறந்த தோழி சமந்தா தனது கதாபாத்திரங்களுக்கு அவரே பேசி வருகிறார். அதனால், அவருக்குப் பின்னணி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காது. அவருடனான எனது டப்பிங் பயணம் முடிந்துவிட்டது” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.