Do you know the reason behind Jayam Ravi, Aarthi divorce
Do you know the reason behind Jayam Ravi, Aarthi divorce

ஜெயம் ரவி, முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் ‘ஜெயம்”. இப்படத்தை அவரது அண்ணன் ராஜா இயக்க, ரவியின் தந்தை மோகன் தான் தயாரித்து இருந்தார்.

இது தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதனால் அப்படத்தின் பெயர் அவருக்கு அடையாளமாக மாறியது.

பின்னர், அண்ணனுடனான கூட்டணியை நிறுத்திவிட்டு, வேறு இயக்குனர்களுடன் பணியாற்ற தொடங்கினார் ஜெயம் ரவி. அந்த வகையில் அவர் பிற இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்தார். உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை, அமீரின் ஆதிபகவன், கல்யாண கிருஷ்ணா இயக்கிய பூலோகம், லட்சுமணன் இயக்கிய ரோமியோ ஜூலியட் போன்ற ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு, தனி ஒருவன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார் அவரது அண்ணன் மோகன் ராஜா. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.

இப்படி, சக்சஸ்புல் நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தன்னுடைய தந்தையுடன் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார் ஆரவ்.

மறுபுறம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சினிமாவில் நடிக்காவிட்டாலும், சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில், இன்ஸ்டாகிராமில் விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் போட்டோவை பார்த்த பலரும் கேட்கும் ஒரே கேள்வி எப்போ சினிமாவில் நடிக்க போகிறீர்கள் என்பது தான். அந்த அளவுக்கு அழகாக இருப்பார் ஆர்த்தி.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்து இருவருமே எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், இது குறித்து, நடிகர் ஜெயம் ரவியே அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும், அவர்களின் விவாகரத்துக்கான காரணத்தை ஜெயம் ரவி வெளியிடவில்லை.

ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் உள்ளாராம். சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை அந்த வளர்ப்பு மகன் தான் நிர்வகித்து வருகிறாராம். அப்படி அண்மையில் ஜெயம் ரவியை வைத்து தங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண இருந்த சுஜாதா, தன் வளர்ப்பு மகன் சங்கர் சொல்வதை ரவி கேட்டு நடக்க வேண்டும் என ஆர்டர் போட்டதாகவும், இது ரவிக்கு பிடிக்காமல் அவர் தன் மனைவியிடம் சண்டையிட்டு பின் இது ஈகோ மோதலாக மாறி பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி தன்னுடைய மாமியார் நடிப்பில் கடைசியாக நடித்த சைரன் படம் முதலுக்கு மோசமில்லாமல் தப்பித்ததாகவும், அதன் பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனாராம். இதையும் அவர் மாமியார் தான் தயாரிப்பதாக இருந்ததாம். அப்படத்திற்காக ரவி ரூ.25 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

ஆனால் அவரது மாமியார், உங்களுக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லை என சொல்லியும் ரவி கேட்காததால் இறுதியில் கொடுக்க சம்மதித்துவிட்டு, படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அது செட் ஆகாது என சொல்லி பாண்டிராஜ் அப்படத்தில் இருந்து விலகி விட்டார். இது ஜெயம் ரவிக்கு தெரிய வர, அவர் தன் படவாய்ப்பு பறிபோனதற்கு உன் அம்மா தான் காரணம் என மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அதில் தான் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.