DMK win Vaiko
DMK win Vaiko

DMK win Vaiko  – சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி அடையும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேட்டி அளித்துள்ளார்.

அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வரும் தேர்தலில், புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

மேலும் தேர்தலில் வெற்றி பெற, 40 தொகுதிகளிலும் நானும், கழக கண்மணிகளும் அர்ப்பணிப்போடு பாடுபடுவோம் என தெரிவித்தார்.

இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ தேர்தல் குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து வைகோ அவர்கள் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் வைகோ குறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், திமுக கூட்டணியில் போதிய இடம் கிடைக்காததால் வைகோ அதிருப்தியில் உள்ளார் என்றும், திமுக கூட்டணியில் குழப்பம் நிலவுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் அரசியல் கட்சிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.