DMDK members protest Duraimurugan
DMDK members protest Duraimurugan

DMDK members protest Duraimurugan – சென்னை : திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி உள்ள இல்லத்தை தேமுதிக கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வரும் இவ்வேளையில், ரகசியமாக திமுக பொருளாளர் துரைமுருகன் மூலமாக தேமுதிக திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக துரைமுருகன் தெரிவித்திருந்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முன்பு, தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல், விருப்பமில்லாத தொகுதிகளை ஒதுக்க அதிமுக முயற்சி செய்து வந்தது. இதனால் அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது.

இந்நிலையில் தேமுதினவினர், திமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய தகவல் வெளியானதால், அதிமுகவும் தேமுதிகவினருக்கான கூட்டணி கதவை அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக, இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள துரைமுருகன் இல்லத்தை கையில் கருப்புக் கொடிகள் மற்றும் தங்கள் கட்சி கொடிகளுடன் தேமுதிகவினர் முற்றுகையிட முயற்சி செய்தனர். ஆனால் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி தர மறுத்துவிட்டனர்.

அதை தொடர்ந்து, மேலும் கோபமடைந்த தேமுதிக தொண்டர்கள், காட்பாடி- சித்தூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.