train
தீபாவளிக்கு தமிழகத்தின் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

வருகிற 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, முக்கிய இடங்களிருந்து வெளியூருக்கு செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிபுரிபவர்கள் செல்லும் வகையில் வருகிற 24,28,29,30 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாம்பரம்-நெல்லை (வண்டி எண்: 82606) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 24-ந் தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.50 மணிக்கு இயக்கப்படுகிறது.

தாம்பரம்-திருச்சி (06025) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 30-ந் தேதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு இயக்கப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (82644) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 29-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.55 மணிக்கு புறப்படும்.

நெல்லை-தாம்பரம் (82606) இடையே சுவிதா சிறப்பு ரெயில் வருகிற 28-ந் தேதி நெல்லை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும்.

என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (புதன் கிழமை) தொடங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது.