பட்டாசு வெடிப்பதால், சுற்றுச்சூழல் மாசடைவதாக கோரி, கடந்த 2015 – ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்க, வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, கடந்த ஆண்டில் டெல்லியில் தீபாவளி முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தடை விதித்தது. இதனால் காற்று மாசுபாடு குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும், நாடு முழுவதும் பட்டாசுகள் தயாரிக்க, வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிக்க கூடாது என பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து நாட்டு மக்களின் நலன் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் குறித்து எண்ணி, மத்திய அரசு ,முற்றிலும் பட்டாசு உற்பத்தியை தடை விதிப்பதை எதிர்த்து , சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ” பட்டாசு தயாரிக்க, விற்க தடை இல்லை” என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.
மேலும், நாட்டில் 90% பட்டாசு உற்பத்தி சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுவதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கும் இந்நேரத்தில் இந்த தீர்ப்பு, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.