Diwali 2018 Cause

Diwali 2018 Cause : தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதன் காரணமாக காற்று மாசுபடுவதை குறைக்க, சுப்ரீம் கோர்ட்டில் தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து, தமிழகத்தில் தீபாவளி அன்று காலை 6 -7 மணியும், இரவு 7- 8 மணிவரையிலும், பட்டாசு வெடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இந்த நேர கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மேலும், அதிக ஒலி எழுப்பும் சரவெடி போன்ற வெடிகளை வெடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

மேலும், கோர்ட் உத்தரவு மீறி பட்டாசு வெடிப்பது கோர்ட்டை அவமதிக்கும் செயல் மற்றும் அவமதிப்பின் பெயரில் இந்திய தண்டனை சட்டம் 188 – கீழ், 6 மாதம் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால், இதற்கு மாறாக தீபாவளி அன்று நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டது.

சென்னையில் காலை முதல் இரவு வரை வெடி சத்தம் கேட்டு கொண்டே இருந்தது.

அதை தொடர்ந்து, தமிழக போலீசார் நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதன்படி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் என்று தமிழகம் முழுவதும் சுமார் 2,190 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளோம் என்று தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, அதிகபட்சமாக சென்னையில் 359 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.