தர்பார் திரைப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதால் விநியோகிஸ்தர் ரஜினியிடம் முறையிட முடிவு செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவி சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.
கடந்த பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ 150 கோடி வசூல் செய்திருந்தது. ஆனாலும் செங்கல்பட்டு உள்ளிட்ட சில ஏரியாக்களில் இப்படம் ரூ 25 கோடிக்கும் அதிகமாக நஷ்டத்தை சந்தித்துள்ளதாம்.
இதனால் சம்மந்தப்பட்ட விநியோகிஸ்தர்கள் ரஜினியை சந்தித்து நஷ்டஈடு கேட்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் படத்தினால் கிடைக்கும் லாபம், நஷ்டம் என எதற்கும் கம்பெனி பொறுப்பேற்காது என வியாபாரத்தின் போதே அக்ரீமெண்ட்டில் கையெழுத்து வாங்கி விட்டதால் இவர்கள் ரஜினியை வளைக்க திட்டமிட்டுள்ளனர்.